tag:blogger.com,1999:blog-58396166970316532112024-02-08T08:06:11.908-08:00சங்கப்பலகைஇன்றைய தமிழ் மரபுக்கவிகளுக்கான ஒரு மேடை.
வாருங்கள் தங்கள் படைப்பை எங்களோடு பகிருங்கள்விஜய்http://www.blogger.com/profile/05822385279677818152noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5839616697031653211.post-66638522279994742812010-09-11T23:37:00.000-07:002010-09-11T23:37:49.842-07:00ஆசிரியர்களுக்கு ஓர் ஆசிரியப்பாபாடலின் தலைப்பு : <b>”செயலில் காட்டுவம் நன்றியை”</b><br />
பாடலின் யாப்பு : <b>நேரிசை ஆசிரியப்பா</b><br />
பாடலாசிரியர் : <b>கா. விஜயநரசிம்மன் (vijay10.n@gmail.com)</b><br />
பாடல் எழுந்த சூழல் :<b> </b>“எனக்குத் தெரிந்த ஒரு அம்மையார் தன் கல்லூரியில் ஆசிரியதிருநாள் விழா கொண்டாட்டத்தில் படிக்கத் தேவை என்று கேட்டுக்கொண்டதின் பேரில் இயற்றித் தரப்பட்ட பா” - ஆசிரியர்<br />
<br />
பாடல் :<br />
<br />
தாமரைத் திறக்கும் கதிர்போல் அறிவை<br />
சூழ்திரைத் திறக்கும் துணையே கல்வி<br />
காரிருள் விளக்கும் கைவிளக் கதுபோல்<br />
ஆரிருள் அகற்றும் அருளே கல்வி<br />
உறுநோய் அதனை ஒழிக்கும் மருந்தென 5<br />
அறியா மைநோய் அழிப்பது கல்வி<br />
இத்தகைக் கல்வி எளிய தன்றே<br />
அத்தனைப் பேர்க்கும் அடைந்திட என்றே<br />
மருதம் உழுது மண்ணுயிர்க் கமுதம்<br />
அருளும் நல்லேர் உழவர் போலே 10<br />
நூற்பல உழுது நுவலும் அறிவை<br />
பாற்படா தார்வம் படைத்தவர்க் கருளும்<br />
நல்லா சிரியர் நிலமிசை உள்ளார்<br />
எல்லா புகழ்க்கும் இருப்பிட மாக<br />
பயிரென களையென பகுத்துப் பாரா 15<br />
துயிர்க்கெலாம் ஒருங்கே உதவும் மழைப்போல்<br />
எளியோன் வலியோன் என்றெலாம் எண்ணா<br />
தளியோ டனைவர்க்கும் அருளுவர் அன்னோர்<br />
நமக்கவர் ஈந்த நல்லறி விற்குச்<br />
சமமா குமோநாம் சொல்லும் நன்றியே 20<br />
கரியதன் முன்னர் கடுகென ஆசான்<br />
திருமுன் நாமுரை சொல்லதும் நாணுமே<br />
பலனில் சொற்களை விடுத்துச்<br />
செயலில் காட்டுவம் செய்நன் றியையே! 24விஜய்http://www.blogger.com/profile/05822385279677818152noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5839616697031653211.post-79255365966553231392010-08-04T07:26:00.001-07:002010-08-20T22:43:41.186-07:00வாரும் புலவீர்காள்...<blockquote><b>ஆர்வத்தின் வந்த அருங்கவிகள் அத்துனையும்</b><br />
<b>ஓர்வலையில் இட்டு உரைத்திட - சீர்வைத்த</b><br />
<b>சேவடி சேர்ந்தே பணிவோம் சிறக்கவே</b><br />
<b>தேவே அருள்நீ உவந்து!</b></blockquote><br />
<blockquote>(நேரிசை வெண்பா)</blockquote><br />
முதல் இடுகையை இறைவணக்கத்துடனே துவங்குகின்றேன். எனினும், எந்த ஒரு மதத்தின் இறைவனையும் குறித்துச் சொல்லவில்லை.<br />
<br />
இனி இந்த வலை நமக்காக... நீங்கள் மரபுக் கவிதையில் ஆர்வமுள்ளவரெனின் (யாக்கவோ அல்லது படிக்கவோ!) உடனே இவ்வலையில் இணைந்து கொள்ளுங்கள், தங்களின் கவிகளையும் அனுப்பி வையுங்கள்... இந்த வலை தோய்வின்றி பரபரப்பாக இயங்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்...<br />
<br />
அன்புள்ள,<br />
விஜய் :-) <zhaghaan@gmail.com><br />
</zhaghaan@gmail.com>விஜய்http://www.blogger.com/profile/05822385279677818152noreply@blogger.com4